அம்மா | |
பக்கத்தில் இருக்கையில் பக்குவப்படாத நெஞ்சம்-இன்று | |
தூரத்தில் துன்பப்படுகிறது. | |
உணவில் சுவைதேடி புண்படுத்திய நாக்கு-இன்று | |
உணவைத்தேடி புண்படுகிறது. | |
தட்டைத்தூக்க நீட்டிய கைகள்-இன்று | |
தட்டை தூக்கிக்கொன்டு அலைகிறது. | |
இருக்கையில் நினைக்கவில்லை | |
நினைக்கையில் நீ இல்லை...................... | |
செ.தினேஷ்குமார் |
No comments:
Post a Comment