அம்மா | |
வாயிலில் நுழையும் போதே | |
வாய்நிறைய சொல்லிய வார்த்தைகள் எங்கே? | |
மாளிகைவேண்டாம் உந்தன் மடிதனில் | |
உரக்கம் போதுமே என்ற மனது எங்கே? | |
பணியிடையில் இன்னிசைபேசியில் இட்ட | |
அன்புக் கட்டளைகள எங்கே? | |
துகிலும் போதும் முந்தானை வாயில் | |
உளறிய உளறல்கள் எங்கே? | |
அவசரஅவசரமாய் செல்லும் போதும் | |
நிதான அழைப்பு எங்கே? | |
மகன் | |
தாயின் அன்பை இழந்தவளுக்கு | |
தாயானேன் | |
உலகம் அறியா உலகிற்கு | |
தந்தையானேன் | |
ஓடிஓடி களைத்துப்போன உனக்கு | |
ஓடாத சொத்தானேன் | |
கருவறையில் இடமளித்த உனக்கு-என் | |
மன அறையில் இடமளித்தேன் | |
மணவறையில் இடம் கொடுத்தவளுக்கு-என் | |
கருவறையில் இடம் கொடுத்தேன் | |
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
அம்மா & மகன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment