அழகு நிலா | ||
பின்னிய கூந்தலில் அழகு நிலா வீற்றிருக்க | ||
வண்ணமீன்கள் இரண்டும் விளையாட | ||
செவ்விதழ் வாயில் கருநீல வெட்டுக்கள் பூத்திருக்க | ||
மங்கையொருத்தி என்னைத் தொட்டாள் | ||
நானும் பூவென நினைத்து இதழ்லோடு இதழ்சேர | ||
நாவினுள் தேன்சுவையோடு கண்கள் இரண்டும் இமைதழுவ | ||
உலகமே பூவாய் மாறியது அவளும் நிலவானாள் | ||
நானும் சென்றேன் அவளுடன் | ||
பன்னீர் தெளித்து பூத்தூவி வரவேற்க | ||
காற்றசைவில் ஆடும் பொன்னூஞ்சலில் | ||
பணிப்பெண் தோழிகள் | ||
அமரச்செய்தனர் | ||
என் காதின் இதழ்களை ஏழுஸ்வரங்களும் தழுவ | ||
காற்றில் அசையும் கொடிபோல நான்திரும்ப | ||
தோகை விரித்தாடும் அழகுமயில் தோற்க | ||
தேவதையொருத்தி நடந்துவரக் கண்டேன் | ||
நானும் இமைகள் மூடாமல் அவளை ரசிக்க | ||
காதல் பார்வையால் என் உடல்முழுவதையும் | ||
ஒரு நொடிப்பொழுதில் மௌனமாக்கினாள் | ||
என் இருகரங்களின் அவளை அனைக்கும் போது............... | ||
காலைச்சூரியன் கண்களில் விழ | ||
சட்டென்று விழித்தேன் | ||
கனவென | ||
உணர்ந்தேன்......................... | ||
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
அழகு நிலா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment