Saturday, September 29, 2018

ஒரு முறை சொல்லிவிடு


ஒரு முறை சொல்லிவிடு
 
 
  விடியற்காலையில்  
  பாமாலை பாடும் பூமாலையே  
  பூஞ்சோலைத் தென்றல் வீதியில்  
  சலங்கைச் சத்தம் கீதம்பாடும்  
  பொற்பாதம் பதியும் தரையாவேனோ!  
 
 
  துகில்கையிலும்  
  நிமிடம் பிரியா காதலிக்கும்  
  அலைகளின் ஒலியில கவிபாடும்  
  இமையத்தையே இருளாக்கும்  
  களைப்பின்றி சாமரம் வீசும் இமையாவேனோ!  
 
 
  உணர்கையில்  
  இலைகளின் இடையில் தவிக்கும்  
  ஈரேழு உலகமே விரும்பும்  
  அனுமதியின்றி இதயம் செல்லும்  
  முகமில்லா மூச்சுக்காற்றாவேனோ!  
 
 
  உதிரும் பூக்கள் 'ஓ' என்று அழுதது  
  மதிப்பவர் இல்லா உலகம் பிறந்திடும்மென்று  
  தூக்கம் மறந்தது துடிக்கும் இதயம்  
  நினைவில்லா நிலையானது  
  உந்தன் புன்னகையால்.............  
 
 
  வெண்மதியின் நேரம் தவிர்ந்தது  
  கதிரவன் பிறப்பால் விண்ணுலகம் இரண்டானது  
  உலகம் மறந்து உயர்ந்து நிற்கும்  
  கற்சிலையும் எழுந்து நடந்தது- பொற்சிலையே  
  உந்தன் பார்வையால்.............   
 
 
 
 
  செ.தினேஷ்குமார்   

No comments:

Post a Comment