ஏய் இளைஞனே |
ரோஜாவின் மீது ஆடும் உனக்கு |
முள்ளின் மீது நடக்கும் எங்களின் |
வலி-தெரியவில்லையே! |
அப்பன் பணமும் தாத்தன் சொத்தும் |
இருக்கும் உனக்கு |
அன்றாடம் காய்ச்சிகளின் |
வறுமை -தெரியவில்லையே! |
காலை ஒருவை மதியம் ஒருவகை |
சாப்பிடும் உனக்கு |
காலையும் மதியமும் கூழ்குடிக்கும் எங்களின் |
நிலைமை-தெரியவில்லையே! |
உன் வண்டிக்கு ஊற்றும் பெட்ரோலை |
எரிவாயு ஆக்கி இருந்தால் |
எத்தனை வீட்டின் அடுப்பு எரியும் என்பதன் |
வலிமை-தெரியவில்லையே! |
நீ குடிக்கும் |
பீரின் அளவுகூட நாங்கள் |
கஞ்சி குடிப்பதில்லை என்பதன் |
வேதனை-தெரியவில்லையே! |
சம்பாதித்து தான் சாப்பிடவேண்டும் என்றால் |
ஏழையும் பணக்காரன் தான் |
அனைவரும் அப்துல்கலாம் தான் |
என்பது-தெரியவில்லையே! |
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
தெரியவில்லையே
தெரியவில்லையே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment