Saturday, September 29, 2018

விடுத்து வந்துவிட்டேன்!


விடுத்து வந்துவிட்டேன்!
 
 
  தொப்புள் கொடியை அறுத்தவளை  
  அழவிட்டு வந்துவிட்டேன்!  
 
 
  கண்ணீரை எடுத்து இரத்தத்தை ஊற்றியவளை  
  விடுத்து வந்துவிட்டேன்!  
 
 
  உழவன் விட்டெரிந்த உதிரியில் நிலாசோறு  
  ஊட்டியவலை விடுத்து வந்துவிட்டேன்!  
 
 
  தோல்விகண்டு துவல்கையிலும் நாளை உனதே  
  என்றாலை விடுத்து வந்துவிட்டேன்!  
 
 
  ஆயிரம் கைகள் அரைந்தாலும் ஒருகையால் மார்பில்  
  வைத்து அனைத்தவளை விடுத்து வந்துவிட்டேன்!  
 
 
  வருகையில் உடலைமட்டும் எடுத்துக்கொண்டேன்  
  மனதை விடுத்து வந்துவிட்டேன்!  
 
 
 
 
  செ.தினேஷ்குமார்   

No comments:

Post a Comment