Saturday, September 29, 2018

அனுமதி தா...........


அனுமதி தா...........
 
 
  தேனெடுக்கும் வேகத்தில்  
  விரைந்த என்னை  
  நிறுத்தியது ஒரு தேனீ  
  பலஉயிர்களின் மரணம்  
  ஒரு உயிரின் மகிழ்ச்சியா?  
  மறுத்தது மனம்-திரும்பினேன்  
 
 
  திரும்பும் நேரத்தில்  
  மீண்டும் நிறு த்தியது தேனீ  
  பல கூட்டுத்தேன் ஒருகூட்டில்  
  மரணமின்றி கிடைத்தலின் முகவரி வேண்டுமா?  
  மலர்ந்தது மனம்-வாங்கினேன்  
 
 
  தேடுதலின் தெரிந்தது  
  உன் முகம்  
  ரசிக்கவா?  
  ருசிக்கவா?  
  அனுமதி தா............................   
 
 
 
 
  செ.தினேஷ்குமார்   

No comments:

Post a Comment