Saturday, September 29, 2018

இல்லாமல் உண்டோ?

இல்லாமல் உண்டோ?


உழாமல் விழாமல்-தானியம்
முளைத்தது உண்டோ?
நெய்யாமல் தைக்காமல்-துணி
போட்டது உண்டோ?

தோண்டாமல் கட்டாமல்-எங்கும்
வாழ்ந்தது உண்டோ?
உழைக்காமல் முயலாமல்-வெற்றி
பெற்றது உண்டோ ?

வெட்டாமல் செதுக்காமல்-சிலை
உருவானது உண்டோ?
தட்டாமல் சுடாமல்- பானை
செய்தது உண்டோ?

அடிக்காமல் மிதிக்காமல்-நெல்மணி
வந்தது உண்டோ?
தாய்தந்தை சொல்கேளாமல்-பிள்ளை
முன்னேறியது உண்டோ?

இமைக்காமல் துடிக்காமல்-உயிர்
வாழ்ந்தது உண்டோ?
காற்று வீசாமல் நீர்ஊற்றாமல்-மரம்
வளர்ந்தது உண்டோ?

சூரியன் எழாமல் விழாமல்-இரவு
வந்தது உண்டோ?
தாய்தந்தை திட்டாமல் அடிக்காமல்-மகன்
சாதித்தது உண்டோ?

இருளில்லாமல்-ஒளி
வந்தது உண்டோ?
துன்பம் இல்லாமல்-இன்பம்
கிடைத்தது உண்டோ?

தோல்வி அடையாமல்-வெற்றி
கிடைத்த்தது உண்டோ?
தாய்தந்தை இல்லாமல்-பிள்ளை
பிறந்தது உண்டோ?


செ.தினேஷ்குமார் 

No comments:

Post a Comment