Saturday, September 29, 2018

மங்கையின் அழைப்பு


மங்கையின் அழைப்பு
 






 
  வெண்நிலவொன்று கண்ணசைத்து அழைக்க
 
  ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நான் எழ

 
  வீணையின் நாண்கள் போன்ற விரல்கள் காற்றிலே தவிழ  
  செந்தாமரையின் இதழ்களான உதடுகள் அழைத்தது.
 
 






 
  மெல்ல மெய்மறந்து இமைகள் மூட

 
  நாணின் கரம் பற்றிச் செல்ல


 
  வழி ஒன்று பிறந்தது



 
  வாயில் ஒன்று திறந்தது.



 
 






 
  இமைகள் இதழ்தழுவி திறக்க


 
  இன்னிசை ஒலிகளால் செவிகள் குளிர

 
  பார்க்கும் இடமெல்லாம் மலர்தூவி நிற்க

 
  மணக்கும் மலராய் ஒளிரும் ஒளியாய்-

 
  மலர்ந்தது ஒர் மங்கை.



 
 






 
  இமைப்பொழுதில் கரம் பிடித்தது


 
  நாடிநரம்புகள் சிலிர்த்தது



 
  உடலின் இரத்தம் கூட ஓரு நிமிடம் நின்றது
 
  தாயின் அன்பும் தந்தை ஞானமும்


 
  நண்பனின் ஆற்றலும் ஒரு சேர கிடைத்தது.

 
 






 
  கடலலை பஞ்சுபபோல கூட்டிச்செல்ல 

 
  காலடி சத்தம் செவிமகிழ



 
  காற்றிலே மெல்லிய கூந்தல் முகத்தினை தழுவ
 
  தூரத்தில் தெரிந்தது ஒரு பொன்னூஞ்சல்.

 
 






 
  கற்களும் சிரிக்குமோ இரும்புச்சங்கிலியும் இசைக்குமோ  
  பூக்களும் பாய்விரிக்குமோ-என்று


 
  எண்ணிய கணததில் அனைத்தும் சொந்தமானது.
 
 






 
  பக்கத்தில் அமர்ந்து பாலூட்ட


 
  பக்குவமாய் கனி இழைக்க


 
  என் இதழ்களோ அதை சுவைக்க


 
  மனதோ உருவக்கனிகையை தேடியது.

 
 






 
  பொன்னூஞ்சல் மெல்லிய காற்றிலே ஆட

 
  நாண்களோ என் தலை வருட


 
  வெண்தாமரை இதழ்களோ என் இதழ்களை நோக்கி வர..........  
 






 
  படார் என்று திறந்தது கதவு, தெளிந்தது என் கனவு.
 
 






 
 
 

     செ.தினேஷ்குமார்

No comments:

Post a Comment