தோழியே
உன்னைத் தேடுகின்றேன்... |
|
கனவுகள் சுமந்து |
பறந்த பட்டாம்பூச்சி |
ஒன்று தன் சிறகுகளை |
இழந்து மெளனமாய் |
இன்று |
மனசுக்குள் அழுவது |
என் செவியில் |
விழுகிறதே........ |
|
என் உயிரெல்லாம் |
பூக்கள் மலர |
கவிதைகள் எழுதிய |
ஜீவன் இன்று |
ஜன்னல் வழியே |
தூரத்து வானின் |
வெள்ளி நிலவிடம் |
பேசி மறுமொழி |
பேச ஆளில்லாமல் |
தனித்து துடிக்கிறதே... |
|
உன் இதயத்தின் |
விசும்பல்கள் |
என் இதயம் |
அறியும். |
|
என் இதயத்தின் |
தவிப்புகளை |
உன் இதயம் |
அறியும். |
|
சீதையின் கண்ணீர் |
அது இராமாயணம். |
பாஞ்சாலியின் கண்ணீர் |
அது மஹாபாரதம். |
நம் கண்ணீர் |
இந்த நட்பு. |
|
என்றாவது என்னை |
நீ சந்தித்தால் |
அழுதுவிடாதே |
உன் பிரிவை சுமக்கின்ற |
என் மெல்லிய |
இதயம் உன் கண்ணீரின் |
கனம் தாங்காமல் |
உடைந்துவிடக்கூடும். |
|
செ.தினேஷ்குமார் |
|
No comments:
Post a Comment