Saturday, September 29, 2018

நண்பனின் அறிவுறை


  நண்பனின் அறிவுறை
 






 
  ஆனந்தம் அவளிடம் இல்லை


 
  அற்புதம் நிறைந்த உன்னிடமே உள்ளது.

 
 






 
  உன் கண்களின் ஒளி அவளைப் பார்ப்பதற்கில்லை
 
  இந்த உலகின் இருளைப் போக்குவதற்கு!

 
 






 
  உள்ளங்கையில் அடங்கும் இதயத்தில் அவளைஅடக்க எண்ணி- நீ
மண்ணில் அடங்காதே!
 






 
  உன் அற்புதகனவை உண்மையாக்க அவளான உண்மைகளை  
  கனவாக மாற்றுவது தப்பில்லையே!

 
 






 
  ஈருயுரை ஓருயிராய் மாற்றி உருவம் கொடுத்தவர்களை மறந்து-ஓருயிரை
அரையுராய் மாற்றும் இது தேவைதானா!
 






 
 






 
 
  செ.தினேஷ்குமார் 

No comments:

Post a Comment