Saturday, September 29, 2018

இரவின் நினைவுகளே


இரவின் நினைவுகளே
 
 
  இரவின் மடியில்  
  இனிக்கும் நினைவுகளே-நீ  
  வந்த நாட்களில் அடையாததை அடைந்தேன்  
  கையறிந்து பெற்ற இன்பத்தை விட  
  மனதறிந்து பெற்றலே இன்பம்  
  உலகில் நிகழா நிகழ்வையும்  
  நினைக்க முடியா நிகழ்ச்சியையும்  
  கணப்பொழுதில் கண்முன் நிறுத்தினாய்  
  இடையுறா துன்பத்தை  
  இமைப்பொழுதில் எடுத்துச்சென்றாயே!  
  சொல்லாமல் வந்தாய்  
  சொல்லி, விட்டுச் சென்றாய்  
  வந்ததில் கால்சுவடு இல்லை-ஆனால்  
  காலச்சுவடை விட்டுச் சென்றாய்...............................  
 
 
 
 
  செ.தினேஷ்குமார்   

No comments:

Post a Comment