உனக்கு மட்டும் |
Only for You….. |
மன்னிப்பு (பூ) |
நண்பர்களுக்கிடையில் இது தேவையா? |
இதுவே பாலமாகுமானால் |
ஓராயிரம் பூக்கள்......................... |
மங்கையின்மனதறியா கயவனை |
மங்கயர் போற்றும் மாமேதையாக்கியவளே! |
உயிரிழந்த கோபத்திற்கு உயிர்தந்தேன் |
உயிருடன் இருந்த உன் நட்பையிழந்தேன்! |
முற்களின் படுக்கையில் இருந்து |
உள்ளங்கையில் உறங்க இடம்கொடுத்தாய் |
உணரமுடியா முள்ளானேன் |
உணர்ந்து எழுகையில் உள்ளங்கையை எடுத்துவிட்டாயே! |
பிரிகையில் |
உள்ளமும் உணர்ச்சியும் அழுவது காதல் |
உள்ளமும் இதயமும் அழுவது தான் நட்பு |
இதயத்தின் அழுகையால் என் உள்ளமே மிதந்தது! |
உலகளவில் பெற்றவெற்றியை விட-மங்கையர் |
மனதளவில் பெற்றவெற்றியே உண்மையான வெற்றி |
உன் மனதில்-எந்நாளில் |
வெற்றித்திருமகனாவேனோ! |
இருபதில்லை இருந்தகாலம் |
காண்பதிற்கு உண்டு வருங்காலம்-என்னை |
வாழவைப்பதே இக்காலம்-உந்தன் |
வருகையால் ஆனது பொற்காலம் |
வழித்தடமாய் அமைய |
அழைக்கவில்லை-நல்ல |
வழிகாட்டியாய் அமையவே |
அழைக்கிறேன்! |
செடிக்குத் தெரியும் |
மலரும் பூக்கள் மடியும் என்று |
மலராமல் இருபதில்லை |
மனதிற்கு தெரியும் |
மறந்து விடுவோம் என்று |
நினைக்காமல் இருபதில்லை |
திட்டியபோது மகிழ்ந்த மனம் |
குற்ற உணர்ச்சியில் அழுகின்றது |
அழுகைகையை துடைக்க வர வேண்டாம் |
அழகு முகத்தால் அன்புப்புன்னகை மட்டும் போதும் |
புன்னகையை எதிர்பார்க்கும் |
பிரியமான தோழன்........................ |
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
உனக்கு மட்டும் (Only for You…..)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment