நல்லதே நினைப்போம் | |
தீபாவளி என்னும் திருநாளில் | |
பறவைகளின் நலனுக்காக | |
வெடிச்சத்தம் கேலா தீபாவளி ஒருபுறம் | |
சிவகாசியின் சில குடும்பம் வாழ | |
இந்தியாவின் பல குடும்பத்தின் வெடிச்சத்தம் ஒருபுறம் | |
அரசின் கட்டளைகள் ஆயிரம் | |
மாசுக்கட்டுப்பாட்டின் கட்டுப்பாடு, | |
காவல்துறையின் கண்டனம் எல்லாம் ஒருபுறம் | |
பட்டாசு வாங்க அடம்பிடிக்கும் குழந்தை, | |
புத்தாடை போட மனம் துடிக்கும் ம்னைவி, | |
பொன்நகைக்காக புன்னகை காட்டும் தங்கை, | |
நீண்ட நாள் கணவுகளை எல்லாம் | |
நிறைவேற்றத் துடிக்கும் தாய்தந்தை, | |
அனைத்து ஆசையையும் நிறைவேற்றுவோமா?-என்ற | |
என்னதில் கொண்டாடும் தீபாவளி ஒருபுறம் | |
விடியாக்காலையில் எண்ணையுடன் | |
எழுப்பும் பாட்டி | |
புத்தாடை மற்றும் நோம்பிக்காசுடன் | |
சாமிஅறையில் இருக்கும் தாத்தா | |
கட்டுக்கட்டாய் பட்டாசும், சுருள் சுருளாய் சரவெடியும் | |
வெடிக்கச்சொல்லி வாசலருகே காத்துக்கிடக்கும் மாமன்மார்கள் | |
பலவகை பலகாரங்களை - ஒரு | |
திணத்தில் செய்துமுடிக்கும் அத்தைமார்கள் | |
அனைவரின் அன்பையும் | |
இரட்டிப்பாக்கும் தீபாவளி ஒருபுறம் | |
இத்தனை தீபாவளியையும் மனதில் | |
மட்டுமே நினைத்துக் கொண்டு | |
SMS & E-Mailகளை பரக்கவிட்டு | |
டிவி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு | |
அலைபேசியில் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும் | |
தமிழ் இனங்களுக்கு-என் | |
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.......................... | |
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
நல்லதே நினைப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment