காதல் என்பது |
சூரியஒளியில் பொருளைத்தொலைத்து |
நிலவொளியில் தேடிய கதை! |
சாதிக்க நினைத்து |
பகற்கனவில் சாதித்த கதை! |
பாசக்கயிற்றால் தற்கொலை |
செய்வதன் உண்மைக் கதை! |
காதல் என்பது |
இரு உருவங்கள் அமர்ந்து பேசும் கடற்கரை! |
இரு உடலை இணைத்து உயிரை எடுக்கும் மணவறை! |
இரு மனங்களில் என்றும் அழியாக்கறை! |
அதிக ஈர்ப்பால், பாசத்தால் வலுக்கும் பாறை! |
மொத்தத்தில் உணர்ச்சிகளை வெளியேற்றும் கழிவறை! |
செ.தினேஷ்குமார் |
No comments:
Post a Comment