Saturday, September 29, 2018

என்னகாரணம்


என்னகாரணம்
 
 
  அழஅழகாய் பட்டுடுத்தி  
  வந்த பெண்னை  
  கைகூப்பினான்  
  அரைஆடையாய்  
  வந்த உன்னை  
  கைதொடுத்தான்  
  என்னகாரணம்!  
 
 
  காலும் தோலும் மறைத்து  
  வந்த பெண்னை  
  சிலைவடித்தான்  
  ஜன்னலும் கதவும்  
  தைத்த உன்னை  
  மடியில் வைத்தான்  
  என்னகாரணம்!  
 
 
  பின்னலென பின்னிய  
  வந்த பெண்னை  
  பாம்பென பயந்தான்  
  கடல் அலைபோல் முடியை  
  விரித்த உன்னை  
  பூவென பறித்தான்  
  என்னகாரணம்!  
 
 
  கண்ணுக்கு மை  
  பூசிய பெண்னை  
  கடலாக்கினான்  
  உதட்டிற்கு சாயம்  
  பூசிய உன்னை  
  சருகாக்கினான்  
  என்னகாரணம்!  
 
 
  குழந்தைக்கு தாய்ப்பால்  
  கொடுத்த பெண்னை  
  கடவுளாக்கினான்  
  கொடுத்தால் அழக போகுமோ-என  
  நினைத்த உன்னை  
  சாம்பளாக்கினான்  
  என்னகாரணம்!  
 
 
  ஈவ்டீசிங் நடப்பது யாரால்  
 
 
 
 
                                                                       செ.தினேஷ்குமார்   

No comments:

Post a Comment