Saturday, September 29, 2018

என் அமுச்சி..................


என் அமுச்சி..................
 
 
  ஆயிரம் ஆயிரமாய்  
  சம்பளம் வாங்கினாலும் - நீ  
  கொட்டுத்த நோம்பிக்காசின்  
  சந்தோஷம் இல்லையே!  
 
 
  பலவகை சாப்பாடு,  
  நேரம் ஒருவகையானாலும் - நீ  
  ஊட்டிய நாம்பல் சோற்றின்  
  சுவை இல்லையே!  
 
 
  பஞ்சு மெத்தையில்  
  ஏசிக்காற்றில் படுத்தாலும் - உன்  
  மடியில் நிலவைப்பார்த்து தூங்கிய  
  தூக்கம் இல்லையே!  
 
 
  ஆயிரம் முறை சீவினாலும் - உன்  
  கைகளால் தூக்கிவாரி சீவிய தலையும்  
  நடு நெற்றியில் வைத்த பவுடர் பொட்டும்  
  அழியவில்லை என் மனதில்!  
 
 
  வசதிகள் ஆயிரம் வந்தாலும்  
  எண்னெய் குளியலுக்காக - நீ  
  துரத்திப் பிடித்த ஓட்டம்  
  ஓயவில்லை என் மனதில்!  
 
 
  ஆடிக் ாக விட்டத்தில் கட்டிய  
  தூறியும், போகிக்காக முகப்பில்  
  சொருகிய காப்பும்  
  அவிழவில்லை என் மனதில்!  
 
 
  உறங்கச் சொல்லிய கதையும்  
  உறக்கக கூவிய பாட்டும் கேலேனோ?  
  கன்னத்திலிட்ட வலிக்காத அடியும்  
  செல்லமாய் கொடுத்த முத்தமும் பெறுவேனோ?  
 
 
  பேருந்தின் சன்னலோரத்தில் - உன்  
  மடியில் அமர்ந்து எண்ணிய மரங்கள்  
  நான் படிக்க புத்தகப்பையை - நீ  
  சுமந்த காலங்களைக் காண்பே ோ?  
 
 
  மருத்துவமணையில் படுத்திருந்த உன்னை  
  பார்க்கவந்த என்னிடம் - நீ  
  கேட்டவார்த்தைகள் "நல்லாயிருக்கையா சாமி"  
  இதை நான் மறவேனோ?  
 
 
  மணித்துளிகளின் குறைவு  
  நாட்களின் கழிவு  
  உன்னைககாண வரும் பொழுது  
  அதுதான் "நல்வரவு"  
 
 
                                                      செ.தினேஷ்குமார்   

No comments:

Post a Comment