அழகே! அழகே! | ||
அழகே! அழகே! | ||
உனைக்காண ஒரு கோடி | ||
விழிகள் வேண்டும் நொடிப்பொழுதில் | ||
காலைச்சூரியன் மலைநடுவில் | ||
உருகா பனிவட்டம் மலைச்சுற்றில்! | ||
புற்களின் நுனியில் ஒருதுளி | ||
உலகம் அடங்கும் பனித்துளி! | ||
குயிலின் சத்தம் மயிலின் ஆட்டம் | ||
மறியல் இல்லா போராட்டம்! | ||
மாசில்லா சுவாசக்காற்று | ||
இதயத்தின் வேகத்தை மாற்று | ||
புகுந்த வீட்டிற்கு வரும் அருவி | ||
அதுதான் உழைப்பவனின் குருதி | ||
கூடிவந்த ஓலைகளின் தென்னை | ||
ஐந்தறிவு உயிர்களின் திண்னை | ||
மனஅரசர்கள் வாழும் மனை | ||
தினமும் விழும் கதிரவனின் ஏவுகணை | ||
முன்புறம் போடும் மாக்கோலம் | ||
மனச்சிக்கல்களைப் போக்கும் மனக் கோலம் | ||
இந்திரனின் இம்சையின் இருமாப்பு | ||
இளஞ்சிறு வண்டுகளின் அணிவகுப்பு | ||
ஊரின் உறவைச்சொல்லும் ஆலமரம் | ||
உன்னை அன்புடன் வரவேற்கும் தோரணம் | ||
மண்ணில் ஏர்பிடித்ததில் பதியும் களைப்பை | ||
உலகத்தவர்களுக்கு வெளிப்படுத்தும் தமிழனின் உழைப்பை | ||
விருந்தோம்பலின் சிவந்துபோன கை | ||
இந்நாட்டை உயர்த்தும் நம்பிக்கை | ||
அன்பின் ஆழம் அறியா மக்கள் | ||
கவலையின் களங்கம் அறியாதவர்கள் | ||
பல துளியின் ஒருதுளி | ||
நாட்டை உயர்த்து அன்பின் வழி............. | ||
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
அழகே! அழகே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment